மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழில் தனது மகன் காளிதாஸ் நடித்துள்ள படங்கள் ரிலீசாகும்போது ரிலீஸாகட்டும், அதற்காக அவரது மலையாள திரையுலக பிரவேசத்தை ஏன் நிறுத்திவைக்கவேண்டும் என நினைத்த நடிகர் ஜெயராம், அங்கே தனது மகனின் படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பையும் துவங்கி வைத்துவிட்டார். படத்தை இயக்குவது நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டு முறை நூறு நாள் படங்களாக கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைன் தான். படத்திற்கு 'பூமரம்' என பெயர் வைத்துள்ளார்கள்.
கல்லூரி கேம்பஸை மையமாக வைத்து, சில ஆய்வுப்பணிகள் செய்து இந்தக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் அப்ரிட் ஷைன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. சில தினங்களுக்கு முன், ஒருநாள் திடீரென இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு விசிட் அடித்தார் நடிகர் நிவின்பாலி. தன்னை வைத்து தொடர்ந்து இரண்டு ஹிட்டுகளை கொடுத்த தனது நண்பர் அப்ரிட் ஷைனை ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் இந்த வருகையம். மேலும் அவர் ஹாட்ரிக் வெற்றி பெறவும், காளிதாஸின் முதல் படம் வெற்றிகரமாக அமையவும் வாழ்த்திவிட்டு சென்றுள்ளார் நிவின்பாலி. தனது ஷூட்டிங்ஸ்பாட்டுக்கே நிவின்பாலி வருகை தந்ததையடுத்து காளிதாஸ் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.