ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் பிரபல விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். இவர் சில மாதங்களுக்கு முன்னர் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதி அடைகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். மதனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதுஒருபுறம் இருக்க மதன் மீது ஏகப்பட்ட மோசடி புகார்களும் குவிந்தன.
இந்த வழக்கு தொடர்பாக எஸ்ஆர்எம்., பல்கலைக்கழக வேந்தவர் பச்சமுத்து உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் மதன் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். மதனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி ஏற்கனவே ஐகோர்ட் இருமுறை காலக்கெடு விதித்து இருந்தது.
மதனை கைது செய்ய, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டபடி மதனை கண்டுபிடித்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் போலீசார் மதனை ஆஜர்படுத்தவில்லை.
மேலும் போலீஸ் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் நீதிபதிகள் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு மதனை கைது செய்யாத சென்னை போலீஸ் கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் மதனை கண்டுபிடிக்க அக்டோபர் 6-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து இறுதி கெடு விதித்து உத்தரவிட்டனர்.