ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கேரளா மாநிலம் பத்தனாபுரம் தொகுதியில் நடிகர்கள் கணேஷ்குமார் மற்றும் காமெடி-குணச்சித்திர நடிகர் ஜெகதீஷ் ஆகியோர் எதிரெதிர் அணியில் போட்டியிட்டனர். எதிரும் புதிருமாக நின்றாலும் கூட, இவர்கள் இருவருமே மோகன்லாலின் நெருங்கிய நண்பர்கள் தான்.. இந்நிலையில் திடீரென ஒருநாள் நடிகர் கணேஷ்குமார் தனது கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்றுக்கு மோகன்லாலை அழைக்க, அவரும் அதை ஏற்று பிரச்சாரத்தில் கலந்துகொண்டு, மேடையில் பேசி, கணேஷ்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதில் சம்பந்தப்பட்ட இன்னொரு நடிகரான ஜெகதீஷ், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அப்போது அவர் வருத்ததுடன், “கணேஷ்குமார் அறிமுகமாவதற்கு முன்பே மோகன்லால் எனக்கு நண்பர். அவர் எனக்கு தன்னுடைய ஆசியையும், ஆதரவையும் அளித்து இந்த தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தியும் உள்ளார். சொல்லப்போனால் கணேஷ்குமாரை வெல்வதன் மூலம் தான் நீ அவர் மூலம் பட்ட மனக்காயத்திற்கு மருந்துபோடமுடியும் என என்னை ஊக்கப்படுத்தியவரும் மோகன்லால் தான். இப்போது அவரே கணேஷ்குமாரின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டது அவரது நண்பரான என்னை மிகவும் புண்படவைத்துள்ளது” என தனது அங்கலாய்ப்பை தெரிவித்தார் நடிகர் ஜெகதீஷ்.
மோகன்லாலின் இந்த செயல் நடுநிலை வகிக்கும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம்குமாரையும் புண்படுத்தி, அதனால் அவர், நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் தற்போது, சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், கணேஷ்குமாருக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்ய சென்றதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் மோகன்லால். அதில் ”கணேஷ்குமார் தன்னை பிரச்சாரத்திற்கு அழைத்ததால் தான் சென்றதாகவும், ஜெகதீஷ் தன்னை அழைக்காததால், அவரது பிரச்சாரத்திற்கு செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.
இதைத் தொடர்ந்து அவர் கூறிய வார்த்தைகள் தான் அதிர்ச்சிகரமானவை. அதாவது, கணேஷ்குமாரை பார்க்கும்போது தனக்கு, ஒரு சகோதரனைப் போன்ற அன்னியோன்யம் ஏற்படுவதாகவும், ஜெகதீஷ் தனக்கு அந்த அளவிற்கு நெருக்கம் இல்லை என்றும், யாருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது தனது பெர்ஷனல் விசயம் என்றும் கூறியுள்ளார் மோகன்லால். இதுநாள் வரை இதுபோன்று கடினமாக யாரையும், வருத்தப்படும்படி மோகன்லால் பேசியதில்லையே என்பதால், மலையாளத் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஜெகதீஷ், மோகன்லாலின் பதிலால், ஸ்தம்பித்துப்போயுள்ளாராம்.