ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் கமலாசுரையா. புகழ்பெற்ற நூல்களை எழுதியதுடன் தனது இறுதி காலத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி பரபரப்பு கிளப்பியவர். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் சினிமாவாகிறது. மலையாளத்தின் முதல் இயக்குனரான கே.சி.டேனியலின் வாழ்க்கையை படமாக எடுத்த கமல் இயக்குகிறார்.
இதில் கமலா சுரையாவாக நடிக்கிறார் வித்யா பாலன். கமலா சுரையா வேடத்தில் நடிப்பதற்காக அவரை பற்றி முழுமையாக படித்து வருகிறார் வித்யா பாலன். கமலா சுரையா எழுதிய நூல்களை மட்டுமல்லாது கமலாவின் சுயசரிதையையும் படித்து வருகிறார். அண்மையில் கமலா சுரையாவின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார். ஒரு கேரக்டராக நடிக்க ஒத்துக் கொண்டால் அந்த கேரக்டராக மாறிவிடுகிற நடிகைளில் வித்யாபாலன் முக்கியமானவர். அந்த வகையில் வித்யா பாலன் இப்போது கமலா சுரையாவாக மாறிக் கொண்டிருக்கிறார். பிருத்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கமலா சுரைய்யாவின் கணவராக முரளி கோபி நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.