ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிருத்விராஜ் நடித்துள்ள 'ஊழம்' படம் வெளியாகிறது.. இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள படம் என்பது தான் இதன் எதிர்பார்ப்பு அளவை அதிகரிக்க செய்திருக்கிறது.. இருவரும் கூட்டணி அமைத்து ஏற்கனவே 'மெமொரீஸ்' படத்தில் வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.. இந்த 'ஊழம்' படத்தை பொறுத்தவரை இது ஒரு ரிவென்ஜ் ட்ராமா.. இந்தப்படத்தின் கதையை கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு முன்பே தயார் செய்துவிட்டாராம் ஜீத்து ஜோசப்.. 'மெமொரீஸ்' பண்ணுவதற்கு முன்பே இந்தக்கதையை பிருத்விராஜிடமும் சொல்லியிருக்கிறாராம்.
ஏனோ தெரியவில்லை அதன்பின் இந்தக்கதையை படமாக்கும் முயற்சியை இருவருமே எடுக்கவில்லை.. அதன்பின் த்ரிஷயம், பாபநாசம் என ஹிட்டுக்களை கொடுத்த ஜீத்து ஜோசப், மீண்டும் இந்த கதையை படமாக்க முன்வந்ததற்கு காரணம் இந்தக்கதையில் உள்ள, இதுவரை சினிமாவில் சொல்லப்படாத ஸ்பெஷல் அம்சம் ஒன்றுதான்.. இத்தனை வருடங்களில் ஹாலிவுட்டில் கூட இன்னும் இந்த விஷயத்தை வைத்து இன்னும் படம் எதுவும் வெளியாகவில்லையாம். அந்தவகையில் ஹாலிவுட்டுக்கே முன்னோடியாக கதை சொல்லியிருக்கிறாராம் ஜீத்து ஜோசப்..