ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து 'பிக் பி' மற்றும் பிருத்விராஜை வைத்து 'அன்வர்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத்.. கடந்த வருடம் பஹத் பாசில், ஜெயசூர்யா ஆகியோரை வைத்து 'அயூப்பிண்டே புத்தகம்' என்கிற மீடியம் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்ததாக தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்ல முடிவெடுத்திருந்தார்கள்..
ஆனால் இப்போது அந்த திட்டத்தை இந்தமாத இறுதிக்கு மாற்றிவைத்து விட்டார்கள்.. இந்த சமயத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கிவரும் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் துல்கர்சல்மான். இடைப்பட்ட சமயத்தில் என்ன நடந்தது என விசாரித்ததில், சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் ரிலீஸாக கொண்டுவந்து விடவேண்டும் என்று துல்கர் விரும்புகிறாராம். சத்யன் அந்திக்காடு தனது படத்தை குறைவான நாட்களில் இயக்குவதில் வல்லவர் என்பதாலும் அமல் நீரத்தின் படம் டெக்னிகலாக வேலை இழுக்கும் என்பதாலும், அமல் நீரத்தின் சம்மத்ததுடன் அவர் படாததை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இந்தப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறாராம் துல்கர்.