மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்த பல படங்கள் தோல்விப்படங்கள்தான். அதிலும் குறிப்பாக ஜீவா நடித்த யான் என் படம் மிகப்பெரிய தோல்விப்படமானது மட்டுமல்ல, எல்ரெட் குமாரை பெரும் கடனாளியாக்கிவிட்டது.அவரது நிலமையை புரிந்து கொண்டு சம்பளம் வாங்காமல் இலவசமாக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க முன் வந்தார் ஜீவா.அதுதான் கவலை வேண்டாம் படம்.தயாரிப்பாளரை பார்த்து ஜீவா சொல்வதுபோல் அமைந்த இந்த படத்தின் தலைப்பு அமைந்தது.
ஜீவா, காஜல் அகர்வால நடித்து, கலை வேண்டாம் படம் விரைவில் ரிலீசகவிருக்கிறது. காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 'அபி & அபி' நிறுவனம் வாங்கியிருக்கிறது.ஹீரோ சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததால், தமிழக உரிமையை கைமாற்றிய வகையிலேயே தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துவிட்டது.இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு உரிமையும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' ஆர்.பி.சௌத்ரி மற்றும் திருப்பதி பிரசாத் இருவரும் இணைந்து 'கவலை வேண்டாம்' படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடவிருக்கிறார்கள்.தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தயாரிப்பாளர்தான் திருப்பதி பிரசாத்.இவர் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் மட்டுமின்றி, மிகப்பெரிய விநியோகஸ்தரும் கூட.ஜீவாவுக்கு தெலுங்கில் மார்க்கெட் வேல்யூ ஏற்படுத்துவதற்காகவே திருப்பதி பிரசாத் உடன் கூட்டணி போட்டு கவலை வேண்டாம் படத்தை வெளியிடுகிறார் ஆர்.பி.சௌத்ரி.