ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல தெலுங்கு நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு ரஜினிகாந்தை நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரது இல்லத்தில் சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார். அந்த நெகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களை தனது டுவிட்டரில் மோகன்பாபு வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் மோகன்பாபுவை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தையும், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மோகன்பாபுவிற்கு ராக்கி கட்டி விடும் புகைப்படத்தையும் மோகன்பாபு பகிர்ந்துள்ளார்.
மோகன்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் ராஜாவைப் போல் கம்பீரமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த கலியுகத்தில் ரஜினிகாந்த் துரியோதனன் என்றும் தான் அவரது உற்ற நண்பன் கர்ணன் என்றும் மோகன்பாபு குறிப்பிட்டுள்ளார். மகாபாரத்தின் வில்லனான துரியோதனன் மற்றும் கர்ணனின் தோழமை சிறந்த நட்பிற்கு இலக்கணமாய் இன்றும் அறியப்படுகின்றது. அந்த வகையில் ரஜினிகாந்தை மோகன்பாபு துரியோதனன் என்று குறிப்பிட்டுள்ளார்.