மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
குடித்துவிட்டு வேகமாக கார் ஓட்டி போலீஸ் வேனை இடித்துவிட்டு தப்பிச்சென்ற சினிமா ஹீரோக்கள் எல்லாம் எல்லாம் இங்கே ஹாயாக ராஜமரியாதையுடன் வலம் வர, கேரளாவிலோ சூயிங்கம் மென்றபடி காரோட்டிய திரைப்பட இயக்குனரை போலீஸார் ஸ்டேஷனில் நான்கு மணி நேரம் உட்கார வைத்த கடமை உணர்வுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. துல்கர் சல்மான் நடித்த மூன்றாவது படமான 'தீவ்ரம்' படத்தை இயக்கியவரான ரூபேஷ் பீதாம்பரன் தான் அந்த இயக்குனர்.. மோகன்லாலின் சூப்பர்ஹிட் படமான 'ஸ்படிகம்' படஹ்தில் சிறுவயது மோகன்லாளாக நடித்தவரும் இவர்தான்..
சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் இவர் காரோட்டி வந்தபோது, போலீஸாரின் வாகன சோதனைக்கு ஆளானார். அவர் குடித்திருக்கிறாரா என்பதை அறிவதற்காக அவரை ஆல்கஹால் மீட்டரில் ஊதச்சொல்லி இருக்கிறார்கள்.. ஏற்கனவே சூயிங்கம் மென்றுகொண்டிருந்த அவர் அந்த மீட்டரில் ஊத, அது உடனே பீப் சத்தம் கொடுத்துள்ளது. உடனே அவரை மது அருந்தியுள்ளார் என போலீசார் ஸ்டேஷனில் உட்காரவைத்து விட்டனர்.
ஆனால் ரூபேஷ் அதை மறுக்கவே, அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை ரிசல்ட்டில் அவர் குடிக்கவில்லை என நிரூபணம் ஆனது.. பின்னர்தான் அந்த ஆல்கஹால் மீட்டர் பழுதடைந்த ஒன்று என்றும், சூயிங்கம் வாசனையைக்கூட ஆல்கஹாலாக அது கணக்கிட்டதால் ஏற்பட்ட குளறுபடி என்றும் தெரியவந்தது. தவறு நேர்ந்தமைக்காக போலீஸார் ரூபேஷிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள். இதுபற்றி தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ள ரூபேஷ், அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் இந்த சிஸ்டத்தை மாற்றப்போகிறார்களா இல்லை ஆர்பிட் சூயிங்கம், விக்ஸ் மிட்டாய் போன்றவற்றை தடை செய்யப்போகிறார்களா என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.