சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் யார் என கேட்டால் அனைவரின் விரல்களும் ஒருமித்து சுட்டிக்காட்டுவது இயக்குனர் சத்யன் அந்திக்காடு பக்கமாகத்தான் இருக்கும்.. அன்றும் இன்றும் மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் பிரபலமாக வலம் வந்த பல நடிகைகள் இவரது கண்டுபிடிப்புதான். இத்தனைக்கும் இயக்குனர் சத்யன் அந்திகாடு மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குனர் இல்லை.. அதிரடிப்படங்கள் எடுத்ததில்லை.. ஆனால் ஒவ்வொரு மலையாள நடிகரும் நடிகையும் அவரது படத்தில் ஒருமுறையாவது நடித்துவிட வேண்டும் என தவம் கிடப்பார்கள்.. ஆனால் வரம் யாருக்கோ ஒருவருக்கு, எப்போதாவது தான் கிடைக்கும்.
அப்படி இருக்கையில் நடிப்பில் அகோரப்பசி கொண்ட துல்கர் சல்மானுக்கு மட்டும் அந்த ஆசை இல்லாமல் போய்விடுமா என்ன..? ஆம்.. ஆசை என்பதைவிட கனவு என்றே சொல்லலாம். சத்யன் அந்திக்காடு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற துல்கரின் நீண்டநாள் கனவு இப்போது நனவாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னே இவர்கள் இணைந்து பணியாற்றப்போகும் செய்தியை சந்தோஷத்துடன் அறிவித்திருந்த துல்கர் சல்மான், பள்ளி செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுவனின் மனநிலையில் ஷூட்டிங் தொடங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.
இதோ இரண்டு தினங்களுக்கு முன் சத்யன் அந்திகாடு படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். இந்த சந்தோஷத்தை உடனே தனது முகநூலில் பதிந்துள்ள துல்கர் சல்மான், சிறுவயதுமுதல் சத்யன் அந்திகாடு படங்கள் துல்கர் மற்றும் அவரது சகோதரி இருவரின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன என்பதையும் அவரை எவ்வளவு ஆராதிக்கிறேன் என்பதையும் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.