வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக சென்னையில் தெலுங்குப் படங்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து பலர் இங்கு படிக்க வந்தததன் காரணத்தால்தான் சென்னையில் தெலுங்குப் படங்களுக்கான வரவேற்பும் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். அதோடு, தமிழ்த் திரைப்படங்களில் பார்ப்பதை விட தெலுங்குத் திரைப்படங்களில் இரண்டரை மணி நேரமும் ஜாலியாகப் படம் நகர்வதும் சில தமிழ்ப்பட ரசிகர்களையும் தெலுங்குப் படங்களைப் பார்க்கத் தூண்டி வருகிறது.
ஜுனியர் என்டிஆர், மோகன்லால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஜனதா காரேஜ்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 1500 தியேட்டர்களில் வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தில் மட்டும் சுமார் 100 தியேட்டர்களில் வெளியாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். இதுவரை தமிழ்ப் படங்கள் எதுவும், சென்னையில் கூட இந்த அளவிற்கு வெளியானதில்லை. அதிக பட்சமாக 50 முதல் 60 தியேட்டர்கள் வரைதான் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள 'ஜனதா காரேஜ்' படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப் புற நகரங்களில் சுமார் 47 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் சுமாரான தமிழ்ப் படங்கள் வெளியாகும் தியேட்டர்களை விட இந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள். சென்னையைச் சேர்ந்த பிரபல தியேட்டர் ஒன்று இந்தப் படத்தை வெளியிடுவதால் யாரும் எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்கள். இல்லையென்றால், அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு அந்தத் தியேட்டரில் படத்தைத் திரையிட வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.