ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிவின் பாலியுடன் நடித்த ஒரு வடக்கன் செல்பி படத்தில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அந்த படம்தான் அவருக்கு கோலிவுட் கதவுகளை திறந்து விட்டது. அதன்காரணமாக கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்புகளிலும் நடித்து வருகிறார் மஞ்சிமாமோகன். தமிழில் சிம்பு, தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படி ஒரே படம் மூலம் இரண்டு பிரபல ஹீரோக்களுடன் நடித்து விட்டதால் பேசப்படும் நடிகையாகி விட்டார் மஞ்சிமா மோகன்.
அதையடுத்து, தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக முடிசூடா மன்னன் படத்தில் நடித்து வரும் மஞ்சிமா அடுத்தபடியாக தமிழில் இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல் தெலுங்கிலும் ஒரு படம் அவருக்கு கிடைத்துள்ளதாம். அந்த படம் மஞ்சிமாவுக்கு கிடைக்க நாகசைதன்யாதான் காரணமாம். அவர்தான் தனது நட்பு வட்டார டைரக்டர் ஒருவர் தனது படத்திற்கு நாயகி தேடியபோது, தன்னுடன் நடித்த மஞ்சிமாமோகனைப் பற்றி சொல்லி அந்த இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். ஆக, தெலுங்கில் நடித் துள்ள முதல் படம் ரிலீசாகும் முன்பே அடுத்த படத்திலும் கமிட்டாகி விட்டார் மஞ்சிமா மோகன்.