ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என்கிற படத்தை இயக்கியவர் சாஜித் யாஹியா. ஜெயசூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் யாஹியா.. பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் கதையின் நாயகனாகவும், மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்கள். இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் மோகன்லாலின் தீவிர ரசிகையாக நடிக்க இருக்கிறாராம்.
அதற்கு காரணமும் இருக்கிறதாம். கதைப்படி மஞ்சு வாரியர் மருத்துவமனையில் பிறந்த சமயத்தில் தான் மோகன்லால் 'அறிமுகமான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படம் வெளியாகுமாம். அதன்பின் அவர் ஆறாவது படிக்கும்போது மோகன்லாலின் படம் ஒன்றை பார்த்து விட்டு தனது வீட்டில் உள்ள பிரச்சனை ஒன்றை சரி செய்வாராம். அதன்பின் மோகன்லால் படங்கள் அவரது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகிவிடுமாம். அவருடைய வாழ்க்கையில் தனது படங்களின் மூலம் மோகன்லால் ஒரு ஆலோசகராகவே மஞ்சு வாரியருக்கு இருப்பாராம்.. இப்படி போகிறதாம் கதை..