ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் முன்னணி நாயகரான பிருத்விராஜே வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு படங்களில் நடித்து விடுகிறார். ஆனால் இளம் முன்னணி நாயகனான துல்கரோ படங்களை ஒப்புக்கொள்வதில் காட்டும் நிதானம் ஆச்சர்யப்பட வைக்கிறது. இத்தனைக்கும் மார்கெட் வேல்யூ உள்ள ஹீரோவான அவர் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களை மட்டுமே ரிலீஸ் செய்கிறார்.. அதிலும் இந்த வருடம் அவர் நடிப்பில் 'கலி' மற்றும் 'கம்மட்டிப்பாடம்' என இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸாகி இருக்கிறது. அதற்கு காரணம் அவர் ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்துவரும் பாலிசி தானாம். அது என்ன அப்படியொரு பாலிசி..?
“என் மனதுக்கு திருப்தியான, அதேசமயம் குடும்பத்துடன் முகம் சுழிக்காமல் அனைவரும் பார்க்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன்.. பணம் கிடைக்கிறதே என தவறான படங்களில் ஒப்புக்கொண்டு நடிக்க மாட்டேன். எல்லா ஹீரோக்களும் ஆரம்பத்தில் இப்படி ஒரு வைராக்கியத்துடன் தான் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார்கள்.. ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கு கிடைக்கும் புகழ், அவர்களது படத்திற்கான பிசினஸ் எல்லாமாக சேர்ந்து அவர்களை தடுமாற வைத்துவிடும்.. இன்றைய பல நடிகர்களும் அப்படிப்பட்ட சூழலில் சிக்கி வெளிவந்தவர்கள் தான். ஆனால் நான் அப்படி இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என்கிறார் துல்கர் சல்மான்..
சமீபத்தில் கூட இவரது தந்தை மம்முட்டி 'கசபா' என்கிற படத்தில் மோசமான போலீஸ் அதிகாரியாக நடித்ததாலும், பெண்களை இழிவு படுத்தும்படியான காட்சிகளில் நடித்திருந்ததாலும் கண்டனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.