பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பொதுவாக மலையாள சினிமாக்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஓடுவது என்பது அரிதாகவே நடக்கிற விஷயம்.. ஏதோ அத்திப்பூத்தாற்போல ஒன்றிரண்டு படங்கள், அதுவும் ஏதாவது தெலுங்கு நடிகர்கள் அந்தப்படத்தில் இருந்தால் மட்டுமே டப்பிங் செய்யப்படும் வாய்ப்பை பெறும். ஆனால் மணிரத்னம் இயக்கிய தமிழ்ப்படமான 'ஒ காதல் கண்மணி' தெலுங்கிலும் டப்பிங் ஆகி ரிலீஸானதன் மூலமாக மலையாள நடிகரான துல்கருக்கு தெலுங்கில் கால் பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆம்.. அந்தப்படத்தால் அவருக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
இதனை பயன்படுத்தி துல்கர் சல்மான் நடித்து அதே வருடம் மார்ச்சில் மலையாளத்தில் வெளியான '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் வேலைகளை அப்போதே ஆரம்பித்தார்கள்.. துல்கரை வைத்து மட்டுமே தெலுங்கில் படத்தை ரிலீஸ் பண்ணிவிடமுடியுமா..? ஒகே கண்மணியை போல இந்தப்படத்தின் கதாநாயகியும் தெலுங்கில் பாப்புலரான நித்யா மேனன் என்பதால் தான் டப்பிங் ரிலீசில் ஆர்வம் காட்டினார்கள்.. ஆனால் சில பல காரணங்களால் இந்தப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்து, ஒரு வழியாக இன்று ஆந்திராவில் ரிலீசாகியும் விட்டது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மானும் நித்யா மேனனும் கலந்துகொண்டனர்.