ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கத்தி படத்தில் ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வரும் கைதி நம்பர்-150 படத்தில் நாயகியாக நடிப்பதற்கு அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா என தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகள் பலரிடம் கால்சீட் கேட்கப்பட்டது. ஆனால், வயதான நடி கருடன் நடித்தால் தங்களது இமேஜ் போய் விடும் என்று கால்சீட் ப்ராபளத்தை காரணம் காட்டி பலரும் நழுவிக்கொண்டனர். விளைவு, இப்போது சிரஞ்சீவி படத்தில் காஜல்அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.
அதேபோல், அஜித்தின் 57வது படத்தில் அனுஷ்கா நடிப்பார் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் பாகுபலி-2 படத்தில் பிசியாக இருப்பதால், அந்த வாய்ப்பும் காஜல்அகர்வாலுக்கு சென்றது. ஆக, மற்ற நடிகை களுக்கு செல்லயிருந்த இரண்டு பெரிய நடிகர்களின் படவாய்ப்புகள் இப்போது காஜலின் பாக்கெட்டில் உள்ளன. அதனால் பெரிய சந்தோசத்தில் இருக்கும் காஜல்அகர்வால், இந்த இரண்டு படங்களிலும் தற்போது மாறி மாறி நடித்து வருகிறார்.
மேலும், மற்ற படங்களில் நடிக்கும்போது கேரவனுக்குள் இருக்கும் காஜலை ஸ்பாட்டுக்கு அழைக்க உதவி இயக்குனர்கள் சென்றால் ஓரிரு முறை அழைத்த பிறகுதான் வெளியில் தலைகாட்டுவாராம். ஆனால் இந்த இரண்டு படப்பிடிப்பு தளங்களிலும் யாரும் தன்னை அழைக்க வராமலேயே தனக்கான காட்சிகளுக்காக கேமரா யூனிட் தயாராகிக்கொண்டிருப்பதை பார்த்ததுமே தானே ஸ்பாட்டுக்கு சென்று டயலாக் பேப்பரை வாங்கி அதை மனப்பாடம் செய்யத் தொடங்கி விடு கிறாராம் காஜல் அகர்வால். சில சமயங்களில் ரிகர்சலிலும் ஈடுபடுகிறாராம். புதுமுக நடிகைகள் போன்று காஜல் இப்படி மாறி விட்டதை மேற்படி பட யூனிட்டில் வேலை செய்பவர்கள் ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.