ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கத் திரையுலகில் மிகப் பெரிய ஸ்டார் குடும்பமாக இருப்பது சிரஞ்சீவியின் குடும்பம் தான். அந்தக் குடும்பத்தில் அடுத்த தலைமுறையினர் கூட நாயகர்களாக அறிமுகமாகி தெலுங்குத் திரையுலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 'மெகா' குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவி குடும்பத்து நடிகர்களில் முதன்மையானவராக இருக்கும் சிரஞ்சீவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வரும் படம் 'கைதி எண் 150'. இந்தப் படத்தின் முதல் பார்வை சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. படத்திற்கான நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஏற்கெனவே 'மெகா' குடும்பத்தைச் சேர்ந்த ராம் சரணுடன் 'மகதீரா, நாயக் கோவிந்துடு அந்தாரிவாடிலே,' ஆகிய படங்களிலும், பவன் கல்யாணுடன் 'சர்தார் கப்பார் சிங்' படத்திலும், அல்லு அர்ஜுனுடன் 'ஆர்யா 2' படத்திலும் நடித்துள்ள காஜல் அகர்வால் தற்போது சிரஞ்சீவியுடன் 'கைதி எண் 150' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தில் உள்ள விமான நிலையில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார்.
காஜல் அகர்வால், சிரஞ்சீவிக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “சிரஞ்சீவி நடித்த பல படங்களைப் பார்த்திருக்கிறேன், அவருடன் ஜோடியாக நடிப்பது பெருமை. இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.