மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இரண்டு தினங்களுக்கு முன் மலையாளத்தில் 'ஆடம்' (ஆதாம்) என்கிற படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்கள் சோஷியல் மீடியாவில் அதைப்பற்றி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.. முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகி இருக்கும் இந்தப்படத்தை சமர் ரஷீத் என்பவர் இயக்கியுள்ளார்.. இப்போது இந்தப்படத்தை பற்றிய இன்னொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் இந்தப்படத்தின் டைட்டிலை தனக்கு தரும்படி கேட்டும், அந்த இயக்குனர் மறுத்துவிட்டதுதான்.
ஆம். கடந்த வருடம் ஜினு ஆப்ரஹாம் என்பவர் சொன்ன கதை பிடித்துப்போக, அந்தப்படத்தில் தான் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார் பிருத்விராஜ். அந்தப்படத்திற்கும் 'ஆடம்' என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள்.. ஆனால் பிருத்விராஜ் மற்ற சில படங்களில் பிஸியாக இருந்ததால், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன்பின்னர் தான் இந்த டைட்டிலில் ஏற்கனவே ஒரு படம் உருவாகி வருவது பிருத்விராஜூக்கு தெரியவந்தது.. உடனே அந்தப்படத்தின் இயக்குனரிடம் டைட்டிலை விட்டுத்தருமாறு பிருத்விராஜ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது..
ஆனால் அந்த இயக்குனரோ, 'ஆடம்' என்கிற டைட்டிலை வைத்து படத்தை தொடங்கி, இப்போது ட்ரெய்லர் வெளியீட்டுக்கும் வந்துவிட்டோம்.. படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதைக்கு இதுதான் பொருத்தமான பெயராக இருக்கும் என பலமுறை ஆலோசித்துத்தான் இந்தப்பெயரை வைத்துள்ளோம். அதனால் டைட்டிலை விட்டுத்தர இயலாது” என நாகரிமாக பதில் சொல்லி அனுப்பிவிட்டாராம்.