ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
“அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக” என்கிற பழமொழியைத்தான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்தத்தான் வேண்டியிருக்கிறது. காரணம் சினிமாவில் தனது வளர்ச்சி தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கு தடையாக இருந்த ஏ.எல்.விஜய்யுடனான தனது திருமண பந்தத்தை இரண்டே வருடத்தில் உதறித்தள்ளி விட்டு, விவாகரத்தும் கேட்டு கோர்ட் படியேறினார் அமலாபால். ஆனால் எதற்காக தனது திருமண பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவை அவர் எடுத்தாரோ, அந்த சினிமா வாழ்க்கைக்கே இப்போது சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆம்.. தமிழ் திரையுலகில் அமலாபாலுக்கு மறைமுகமான ரெட்கார்டு போடப்பட்டுள்ளதாம்.
இது கிட்டத்தட்ட உண்மைதான் என சினிமாவில் உள்ள சில முக்கிய புள்ளிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்கிறார்கள். விசாரித்ததில், தமிழ் திரையுலகில் பலரும் ஏ.எல்.விஜய் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளார்கள் என்றும், அவரது திருமண வாழ்க்கை, அமலாபாலால், அவரது சினிமா ஆசையால் இப்படி அற்பாயுசில் கலைந்துவிட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் அவர்கள் அமலாபால் மீதான எதிர்ப்பை காட்டும் விதமாக, அமலாபாலை வேறு யாரும் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்யவேண்டாமென ஒருவருக்கொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்களாம்.
இன்னொரு பக்கம் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் திரையுலகில் அனைவரும் மதிக்கூடிய பழமையான ஒரு தயாரிப்பாளர். அவரது குடும்பத்தில் இப்படி ஒரு பிளவு, எங்கிருந்தோ வந்த மலையாள நடிகையான அமலாபால் மூலம் ஏற்பட்டதை மற்ற சில சீனியர் தயாரிப்பாளர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையாம். அதனால் அமலாபாலுக்கு தமிழில் புதிய படம் கிடைப்பது இனி சிக்கல் தான் என்றே சொல்கிறார்கள். தற்போது அவருக்கு வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'வடசென்னை' படம் மட்டும் தான் கைவசம் உள்ளது. இனி படங்கள் ஏதும் ஒப்பந்தமாகிறதா என்பதை பொறுத்து தான் இந்த ரெட்கார்டு விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவரும்.