மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ரிலீஸாகி நான்கே நாட்களில் தான் நடித்த 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' படம் ஆன்லைனில் லீக்கானதால் அதிர்ச்சியடைந்துள்ளார் மலையாள நடிகர் ஜெயசூர்யா. கடந்த வராம் வெளியான இவரது இரண்டு படங்களில் 'பிரேதம்' நன்றாக ஓட, 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' சுமாராகத்தான் கல்லா கட்டி வருகிறது. இந்தநிலையில் தான் கோழிக்கோடு செக்கன் என்கிற பேரில் உள்ள பேஸ்புக் ஐடி மூலமாக இந்தப்படம் இணையத்தில் லீக்காகி இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளதாம்..
மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிலிருந்து இது இணையத்தில் லீக் செய்யப்பட்டிருந்தாலும் இதனை லீக் செய்தவரை போலீஸார் ட்ரெஸ் பண்ணிவிட்டதாகவு சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் ரிசல்ட்டை ஜெயசூர்யா ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் காரணம் நிவின்பாலி, குஞ்சாக்கோ போபன் ஆகியோரை தொடர்ந்து அதிரடி போலீஸ் ஆபிஸர்கள் பட்டியலில் தனக்கும் ஒரு இடத்தை பிடிக்க 'தாவூத் இப்ராஹிம்' மூலமாக ரொம்பவே மெனக்கெட்டு கடின உழைப்பை கொட்டியிருக்கிறார் ஜெயசூர்யா. அந்த உழைப்பு இப்படி யாரோ ஒரு முகம் தெரியாத நபரால் வீணாவதை அறிந்துதான் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்