ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொம்மலாட்டம் படத்தை இயக்கிய பிறகு இயக்குனர் சிகரம் கே.பாலசந்த ருடன் இணைந்து ரெட்டைச்சுழி படத்தில் நடித்தார் பாரதிராஜா. அதையடுத்து சில வருடங்களுக்குப்பிறகு அன்னக்கொடியும் கொடி வீரனும் -என்ற படத்தை டைரக்டர் அமீரை நாயகனாக வைத்து இயக்குவதாக இருந்தார். ஆனால் அதையடுத்து ஏற்படட சில மாற்றங்கள் காரணமாக, அந்தபடத்தில் புதுமுக ஹீரோ நாயகனாக நடித்தார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் வில்லனாக நடித்தார். ஆனால் அதன்பிறகு இயக்குவதில் இருந்து விலகி பாண்டியநாடு, நினைத்தது யாரோ உள்பட சில படங்களில் நடிக்கத் தொடங்கினார் பாரதிராஜா.
இந்த நிலையில், பாரதிராஜா தனது கனவு படம் என்று கூறி வந்த குற்றப்பரம்பரை பட சாயலில் டைரக்டர் பாலவும் ஒரு படத்தை இயக்க களமிறங்கினார். விளைவு, தனது கதையைத்தான் அவர் படமாக்குகிறார் என்று பாரதிராஜா சொல்லப்போக, இல்லை நான் வேறு கதையை இயக்குகிறேன் என்ற பாலா சொல்ல, இருவருக்குமிடையே மோதல் வெடித்தது. அதையடுத்து அமைதி ஏற்பட்ட நிலையில், இப்போது பாரதிராஜா குற்றப்பரம்பரையை விடுத்து வேறொரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால், அவர் அந்த படத்தைதான் இயக்குகிறார் என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில், பாலாவும் தான் ரெடி பண்ணியுள்ள சரித்திர படத்தை இயக்க தயாராகி விட்டாராம். அந்த வகையில், பாரதிராஜா குற்றப் பரம்பரை என்ற படத்தை இயக்க, பாலா குற்றப்பத்திரிகை -என்ற பெயரில் புதிய படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.