ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் க்ரிஷ் இயக்கும் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தில் நடித்து பாலகிருஷ்ணா தனது மகனை டோலிவுட்டில் நாயகனாக களமிறக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார். கௌதமிபுத்ர சாதர்கனி திரைப்படம் தனது 100வது திரைப்படம் என்பதால் பாலகிருஷ்ணா இப்படம் கட்டாய வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அவசரப்படாமல் நிதானமாக உழைத்து வருகின்றார். இயக்குனர் க்ரிஷின் திருமணம் ஆகஸ்ட் 8ல் நடக்கவிருப்பதால் இயக்குனர் மற்றும் படக்குழுவிற்கு விடுமுறை அளித்துவிட்டார் பாலகிருஷ்ணா.
ஓய்வு நேரங்களில் தனது மகன் மோக்ஷக்னாவை நாயகனாக அறிமுகப்படுத்த முன்னணி இயக்குனர்களிடம் பாலகிருஷ்ணா கதை கேட்டு வருகின்றாராம். இயக்குனர் கொரட்டாலா சிவா மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பாலகிருஷ்ணாவிடம் கதை கூறியுள்ளனராம். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையாம். கௌதமிபுத்ர சாதர்கனி படத்தில் மோக்ஷக்னா உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார் .விரைவில் மோக்ஷக்னா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.