ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் கன்னட திரைப்பட விழா நேற்று தொடங்கியது வருகிற 31ந் தேதி வரை 4 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இதில் கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, பரவலாக பாராட்டப்பட்ட 12 படங்கள் திரையிடப்படுகிறது.
ரஷியன் கலாச்சார மையத்தில் நேற்ற துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை சரோஜாதேவி பேசும்போது: கன்னட மக்களும், தமிழ மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். கன்னடத்தில் இருந்து வந்த என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர்கள் தமிழக ரசிகர்கள். இப்போதும் பலர் கன்னடத்தில் இருந்து தமிழில் நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவளித்து வருகிறார்கள். அதேபோல கன்னட படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பலரிடம் பேசிப் பார்த்ததில் அவர்கள் கன்னட படம் பார்க்க தயராக இருக்கிறார்கள். எனவே இங்குள்ள சினிமா சங்கங்கள் கன்னட படங்களை இங்கு திரையிட ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார்.