ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நாயகனாக நடித்த படம் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வடிவேலுவின் கதாநாயகன் கேரியரில் முக்கியமான படமானது. அதையடுத்து அவர் நாயகனாக நடித்த தெனாலிராமன், எலி போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் காமெடியனாக கத்திச்சண்டை படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து பி.வாசுவின் சிவலிங்கா படத்திலும் காமெடியனாக நடிக்கிறார்.
ஆனால் இதற்கிடையே மீண்டும் சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது கத்திச்சண்டை படத்தில் நடித்து முடித்து விட்டார். அதனால் ஆடி மாதம் முடிந்ததும் 23ஆம் புலிகேசி படவேலைகள் தொடங்குகிறதாம். இந்த ஸ்கிரிப்டை ஏற்கனவே வடிவேலுவுக்காக சிம்புதேவன் ரெடி பண்ணி விட்டதால், ஆடி மாதம் முடிந்ததும் ஒரு நல்ல நாளை பார்த்து பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்குகிறாராம் சிம்புதேவன்.