ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரையுலகிலும் தனது காலை அழுத்தமாக ஊன்றவேண்டும் என்பது நிச்சயமாக மோகன்லாலின் எண்ணமில்லை. ஆனால் தெலுங்கிலிருக்கும் இயக்குனர்கள் தங்களது படத்தில் அவர் நடிக்கவேண்டும் என விடாப்பிடியாக நின்றதால் தான், தற்போது தெலுங்கில் 'ஜனதா கேரேஜ்' மற்றும் 'மனமந்தா' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால்.. இதில் 'ஜனதா கேரேஜ்' படத்தில் மோகன்லால் தெலுங்கில் டப்பிங் பேசியது இயக்குனர் கொரட்டாலா சிவாவுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் அப்செட் ஆனதாக ஒரு தகவல் சில தெலுங்கு ஊடகங்களில் பரவி வருகிறது.. அதனால் மோகன்லாலுக்கு பதிலாக வேறு யாரையாவது டப்ப்பிங் பேச வைக்கலாமா என இயக்குனர் ஆலோசித்து வருவதாகவும் கூட செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் உண்மை நிலவரம் பற்றி விசாரித்ததில் அந்த தகவலில் துளி கூட உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.. காரணம் இன்னும் மோகன்லால் தெலுங்கு பதிப்புக்கான டப்பிங் பேச ஆரம்பிக்கவே இல்லையாம்.. அவர் தற்போது மலையாள வெர்ஷனுக்கான டப்பிங் மட்டுமே பேசியுள்ளார்... இந்தநிலையில் அவர் பேசாத டப்பிங்கை நன்றாக இல்லை என சொவது காமெடியாக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தெலுங்கில் மோகன்லால் காலூன்றுவது பிடிக்காத ஒரு சிலர்தான் இந்த வதந்தியின் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.