ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படத்தின் தலைப்பை தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர்கள் கில்டு, சேம்பர் என மூன்று இடங்களில் பதிவு செய்யலாம். ஒரே தலைப்பு மூன்ற சங்கங்களிலும் வெவ்வேறு நபர்களால் பதிவு செய்யப்பட்டு தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகிறது. பல தலைப்புகளை பதிவு செய்து விற்பனை செய்வதும் நடந்து வருகிறது. இதனை தடுக்க சிங்கிள் விண்டோக் அப்படையில் ஒரே இடத்தில் பதிவு செய்யும் முறைய கொண்டு வர வேண்டும் தலைப்புகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று இயக்குனர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இயக்குனர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் “தலைப்புகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற பலமுறை நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். அதுதான் நியயமான பதிவாக இருக்கும். எங்கள் உறுப்பினர்கள் தொடர்ந்து இதனை வற்புறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பேசி முடிவெடுக்க வேண்டும்” என்று அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளனர். இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் இன்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
ஆர்ப்பாட்டம் : இதனிடையே இணையதளத்தில் பட தலைப்பை பதிவு செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி திடீரென இயக்குநர்கள் சங்கம் உறுப்பினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.