ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இதுவரை 149 படங்களில் நடித்து விட்டவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. ஒருகட்டத்தில் பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் இறங்கினார். பின்னர் காங்கிரசில் தனது கட்சியை இணைத்தார். ஆனால் கடைசியாக நடந்த தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து சிரஞ்சீவியின் கவனம் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியது. அதன்காரணமாக 8 ஆண்டு களுக்கு பிறகு தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கத் தொடங்கினார். சிரஞ்சீவி ஸ்டைலுக்கேற்ப அந்த கதையில் சில பல மாற்றங்களை செய்து கத்திலாண்டோடு என்ற அந்த படவேலைகளை தொடங்கி விட்டனர்.
ஆனால், நயன்தாரா, அனுஷ்கா போன்ற தென்னிந்திய நடிகைகளிடம் கால்சீட் கேட்டபோது வேறு படங்களை காரணம் காட்டி நடிக்க மறுத்ததால், பின்னர் தீபிகா படுகோனே, கைத்ரினா கைப் உள்ளிட்ட சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர். ஆனால் அவர்களெல்லாம் பிசியாக இருப்பதால் யாரும் செட்டாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் காஜல்அகர்வாலிடம் அந்த படத்தை தயாரிக்கும் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண்தேஜா கால்சீட் கேட்டாராம். ஆனால் அவரோ, மற்ற நடிகைகளைப்போன்று கால்சீட் இல்லை என்று தட்டிக்கழிக்க விரும்பவில்லையாம்.
மாறாக, எவடு, மகதீரா என்ற இரண்டு படங்களில் நாம் இணைந்து நடித்திருக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் அப்பாவுடனும் ஜோடி சேர்ந்து நடித்தால் பின்னர் உங்களைப்போன்ற இளம் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று தனது எண்ணத்தை ஓப்பனாக சொல்லி விட்டாராம். இதனால் வேறு நடிகை தேடி வருகிறாராம் ராம்சரண்தேஜா. ஆனால் இந்த சேதி சிரஞ்சீவியின் காதுக்கு சென்றதை அடுத்து செம டென்சன் ஆகி விட்டாராம். ஒரு நேரத்தில் என்னுடன் நடிக்க நான் நீயென்று எத்தனை நடிகைகள் போட்டி போட்டனர். ஆனால் இன்றைக்கு யாருமே நடிக்க மறுக்கிறார்களே என்று காலக்கொடு மையை நினைத்து பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம்.