மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட் பிரபலம் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் போன்று தெலுங்கு திரை உலகின் பவர்ஸ்டார் பவன் கல்யாணும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நிகழ்ச்சியை இயக்குவதற்கு தகுதியான இயக்குனரை இதுவரை தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுக்காததாலும் ஏற்பாடுகள் இது வரை துவங்கப்படாததாலும் பவன் கல்யாணே, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பவன் கல்யாணின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்தார் கபார் சிங் திரைப்படம் தோல்வியைத் தழுவியதால் தொலைக்காட்சி நிறுவனமே பவன் கல்யாண் நிகழ்ச்சியை கைவிட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.