ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த மே மாதம் கேரளாவில் பெரும்பாவூர் பகுதியை செந்த சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடெங்கும் அதிர்ச்சியலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.. ஜிஷா குடியிருந்த வீடு பாதுகாப்பற்ற சாதாரண வீடாக இருந்ததும் கூட, ஜிஷாவிற்கு தன்னை காப்பற்றிக்கொள்ள முடியாமல் போக காரணமாக அமைந்தது.. அதனால் ஜிஷாவின் தயார் அவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு நல்ல வீடு கட்டிக்கொள்வதற்காக தான் நடித்த ஆடுபுலியாட்டம்' படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அப்போது வழங்கினார் ஜெயராம்.
ஆனால் மலையாள திரையுலகின் ஜனப்ரிய நாயகனின் யோசனையோ வேறுமாதிரி இருந்தது.. கையில் நிலமிருந்தும் குடியிருக்க வீடில்லாமல் ஆதரவற்ற சூழலில் வசிக்கும் அன்றாடங்காய்ச்சி மக்களில் இருந்து இன்னொரு ஜிஷாவுக்கு இந்த கதி ஏற்பட்டு விடக்கூடாது என முடிவு செய்தவர், நன்கு யோசித்து தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.. அதுதான் அடிமட்டத்தில் வாழ்வாதாரத்திற்கே சிரமப்படும் 1000 பேருக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தர முடிவு செய்தார்..
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.. இதில் முதல் கட்டமாக மாவேலிக்கரை பகுதியில் ஆறு வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.. படிப்படியாக அடுத்தடுத்து ஒவ்வொரு கட்டமாக மற்ற வீடுகளும் கட்டைத்தரப்ப்படுமாம். இதற்கான நிதியை திலீப் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் இன்னும் சில என்.ஆர்.ஐ அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. தங்களது பெயரில் இரண்டு சென்ட் நிலமாவது வைத்திருக்கும் பாமர ஜனங்களில், அதேசமயம் கணவனை இழந்து குடும்பத்தை நடத்த சிரமப்படும் விதவை தாய்மார்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை தரப்படுமாம்.