ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் தங்கள் திரை உலக பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகின்றனர். சிரஞ்சீவி தனது 150வது திரைப்படமான கத்திலான்டோடு திரைப்படத்திலும், பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படத்தை வரலாற்று பின்னணியிலும் உருவாக்கி வருகின்றார்.
இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் அவரது 100வது படத்திற்கு பிரபல வசனகர்த்தா சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றார். அதே போல் இயக்குனர் விவி விநாயக் இயக்கும் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கும் சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றாராம். ஒரே நேரத்தில் சரித்திர படத்திற்கும், சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படத்திற்கு சாய் மாதவ் வசனம் எழுதுகின்றார்.
முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களில் பணியாற்றும் பெருமை சாய் மாதவ் போல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் கிடைத்துள்ளது. சிரஞ்சீவியின் கத்திலான்டோடு, மற்றும் பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சாதர்கனி என இருபடங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இவ்விரு படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.