மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகருமான ராம் சரண், தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். தெலுங்கில் துருவா என பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். துருவா படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் ராம் சரண், கபாலி படம் பார்க்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று திரைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களிலும் வசூலை அள்ளி வருகின்றது.
திரை உலகில் உச்சக்கட்ட கொண்டாட்டமாக பார்க்கப்பட்ட கபாலி திரைப்பட வெளியீட்டிற்கு நடிகர் ராம் சரணும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டிருக்கும் ராம் சரண் கபாலி படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டோலிவுட்டின் பிரம்மாண்ட வெற்றியாக அறியப்பட்ட பாகுபலி படத்தின் முதல் நாள் வசூலை கபாலி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியும் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவறவிட்டுவிட்டதாக வருத்ததுடன் கூறியுள்ளார். மேலும் விரைவில் கபாலியை தரிசிக்கவுள்ளதாகவும் ராஜமௌலி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்,