ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சிவக்குமாரின் மகன் எனும் அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. தனக்கென்ன ஒரு நடிப்பு, ஸ்டைல் என ரசிகர்களை ஈர்த்த சூர்யா, இன்று ரஜினி, கமல், விஜய், அஜித்திற்கு பிறகு இவர் தான் உள்ளார். சூர்யாவிற்கு இன்று 40வது பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி, தன் பெற்றோரிடம் ஆசி பெற்றார். பின்னர் மனைவி, குழந்தைகளுடன் வீட்டிலேயே எளிமையாக பிறந்த நாளை கொண்டாடினார்.
சூர்யாவிற்கு நண்பர்களும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், போன் தொடங்கி சமூக வலைதளம் வரை அனைத்திலும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். கடந்த இரண்டு பிறந்தநாளின் போது சூர்யா வெளியூர்களில் படப்படிப்பில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக சூர்யா, தன் பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் இந்தாண்டு சூர்யா தன் ரசிகர்களை சந்தித்து, பிறந்தநாளையும், ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்தையும் ஏற்று கொண்டார்.
நேற்று மாலை, சென்னை, வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடினர். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடியவர், ரசிகர்களுடன் இணைந்து போட்டோவும் எடுத்து கொண்டார்.
இதனிடையே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் பலர் கோவில்களில் சிறப்பு விழிபாடும் நடத்தினர். பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குதல் என உதவிகளும் செய்தனர்.