ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் கட்டுமஸ்தான, ஸ்டைலீஸான நடிகர் ஜான் ஆபிரஹாம். தற்போது டிஷ்யும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் ‛ஹேரா பெரி-3'- பற்றிய அறிவிப்பு வெளியானது. இதில் அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம் நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்று வரை இப்படம் ஆரம்பமாவது பற்றி எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜான் ஆபிரஹாமிடம் இப்படம் பற்றி கேட்டபோது, அவர் கூறியதாது... தயாரிப்பாளர் பெரோஸ் நாடியாவாலா ஒருவர் தான் இந்த கேள்விக்கு விடையளிக்க முடியும். அவர் சொன்னால் தான் நானும் தெரிந்து கொள்வேன். அதுவரை இப்படம் பற்றிய எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. எனக்கு கடைசியாக கிடைத்த தகவல்படி அபிஷேக் பச்சன் கூட இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது என்றார்.