ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் நாயகனாக நடித்துள்ள 'தொடரி, கொடி' ஆகிய இரண்டு படங்களும் முழு வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. 'கொடி' படத்தை மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்துவிட்டார் தனுஷ். இருந்தாலும் அதற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட 'தொடரி' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் பல வேலைகள் இருந்ததால் அவை முடிவடைய கொஞ்சம் தாமதமானது. 'கொடி' படம் முழுவதுமாக முடிந்திருந்தாலும் முறைப்படி முதலில் ஆரம்பிக்கப்பட்ட 'தொடரி' படம்தான் வெளியாகும் என்று தனுஷ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதன்படி 'தொடரி' படத்தை 'கபாலி' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருந்தனர். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் என்தால் அந்த சமயத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது. 15ம் தேதி திங்கட்கிழமை என்பதால் மூன்று நாட்கள் முன்னதாக 12ம் தேதியே படத்தை வெளியிட்டு அடுத்த 3 விடுமுறை நாட்களிலும் படத்திற்கு வசூலைப் பெற்றுவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வமான தேதியை அறிவிக்க உள்ளார்கள்.