ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் நடிக்கும் படங்களில் மட்டுமின்றி நடைமுறையிலும் விதவிதமான டிரஸ் அணியக்கூடியவர் தமன்னா. தனக்கு பிடித்தமான டிரஸ் என்றால் அதை என்ன விலை கொடுத்தாலும் வாங்கி விடுவாராம். முக்கியமாக வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காக செல்லும்போது அங்கிருந்து பல சூட்கேஸ்களில் வித்தியாசமான மாடல் கொண்ட டிரஸ்களாக வாங்கி வருவாராம் தமன்னா. அதனால், படப்பிடிப்புகளுக்கு வரும்போது ஒரு டிரஸ் அணிந்தால், திரும்பிச்செல்லும்போது இன்னொரு காஸ்டியூமில் செல்வாராம். அந்த அளவுக்கு ஆடைகள் மீது அதிக பிரியம் கொண்டாவராம் தமன்னா.
அப்படித்தான் தர்மதுரை படப்பிடிப்புககாக மதுரைக்கு சென்றபோதும், அந்த படத்தில் புடவை காஸ்டியூமில் நடித்தபோதும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன்னிடமிருந்த விலையுயர்ந்த நவீன காஸ்டியூம்களை அணிந்து ஜிளு ஜிளு வென நடமாடிக்கொண்டிருந்தாராம் தமன்னா. அப்போது ஒருநாள், ஒரு சிகப்பு கலர் டிரஸ்ஸில் அந்த கிராமத்து ஏரியாவை சில உதவியாளர்களுடன் சுற்றிப்பார்க்க சென்ற தமன்னாவை, தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காளை மாடு அவ்வப்போது முறைத்தபடியே மேய்ந்து கொண்டிருந்ததாம். ஆனால் அவர்கள் அந்த மாட்டை நெருங்க நெருங்க, அவரது சிகப்பு கலர் டிரஸ்ஸில் மிரண்டு போன மாடு சீறியபடி தமன்னாவை நோக்கி பாய்ந்து வந்ததாம். இதனால் ஆடிப்போனாராம் தமன்னா. அதையடுத்து உதவியாளர்கள் அவசர அவசரமாக அவரை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார்களாம். அந்த சம்பவத்திற்கு பிறகு மதுரையில் இருந்தநாள் வரை சிகப்பு கலர் டிரஸ்ஸே அணியவில்லையாம் தமன்னா.