ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதில் கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்கத்தில் நந்தா, பூர்ணா ஜோடியாக நடித்திருக்கும் "வேலூர் மாவட்டம்" படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டு இசை தகட்டை வெளியீட்டு பேசினார்.
அப்போது, வேலூர் மாவட்டம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் நந்தா நடித்துள்ளார். பொதுவாக போலீஸ் வேடத்தில் நடித்தாலே, அந்த கம்பீரம் வந்துவிடும். நான் சிறுத்தை படத்தில் நடித்தபோது அதை உணர்ந்தேன். சிறுத்தை படத்தில் நடிக்கும் முன்பாக, அதன் ஒரிஜனல் படமான தெலுங்கு படத்தை பலமுறை பார்த்தேன். அப்போதிலிருந்து எப்படா காக்கி சட்டை மாட்டுவேன் என்று இருந்தது.
இந்த படத்தில் நந்தாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம் பொருத்தமாக உள்ளது. டிரெய்லரும் பிரமாதமாக வந்துள்ளது. பருத்திவீரன் எடுக்கும் போது கதையே எங்களுக்கு தெரியாது. ஆனாலும் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருந்தது. நேரம், காலம் பார்க்காமல் கஷ்டப்பட்டு நடித்தேன். எல்லோரும் ஆர்வமாக உழைப்பை கொட்டினார்கள். பலன் கிடைத்தது. அது போல் இந்த படத்துக்கும் உழைப்பை கொடுத்துள்ளனர். நிச்சயம் வெற்றி பெறும். கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.