ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி ஹரோக்களில் ஷாருக் கானும் ஒருவர்.அதைபோன்று பாலிவுட் இயக்குநர்களில் இம்தியாஸ் அலி தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்தவர்.இவர்கள் இருவரும் தற்போது ஒருபடத்தில் இணைய உள்ளனர் . இந்நிலையில் ஷாருக் சமீபத்தில் ஒரு பேட்டில் இம்தியாஸ் அலியை தனக்கு நீண்ட வருடமாக தெரியும் என்றார்.
இது குறித்து மேலும் ஷாருக் கூறியதாவது " இம்தியாஸ் அலி, சோச்சா நா தா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநரானார். அவரின் படங்களையும் அவரையும் மிகவும் பிடிக்கும். இம்தியாஸ் தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் என்னிடம் கூறுவார். அதில் எனக்கு ஜப் வி மெட் மற்றும் ஹைவே படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை .தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு காதல் கதையில் நடிப்பதாகவும், இயக்குநர் எனது வயதை நினைவில் வைத்து கதையை உருவாக்கி உள்ளதாகவும், ரசிகர்களுக்கு பிடித்தவாரு இந்தப்படம் இருக்கும் " என்றார்.
இப்படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கயிருக்கிறது. இப்படத்தில் ஷாருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷர்மா நடிக்கிறார்.