ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இன்றைய சூழலில் எந்த ஒரு மலையாளப்படமும் தமிழ்ப்படங்களின், தமிழ் நடிகர்களின் தாக்கம் இல்லாமல் வெளிவருவதே இல்லை. படத்துக்குப்படம் அந்த அளவு மட்டுமே மாறுபடும்.. அவ்வளவுதான். இரண்டு தினங்களுக்கு முன் அமலாபால் மலையாளத்தில் நடித்த 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் அமலாபாலுக்கு ஜோடியே இல்லையென்றாலும் படத்தில் அவரை இரண்டு ஹீரோக்கள், ஒரு காமெடியன் உட்பட மூன்று பேர் காதலிப்பார்கள். ஞாபகசக்தி மறந்து போன அமலாபாலிடம் தானும் அவரும் காதலித்ததாக கூறுவார் ஒரு ஹீரோவான ஜெயசூர்யா..
அதில் லோக்கல் ரவுடியான ஜெயசூர்யா, தன் மீது அமலாபாலுக்கு எப்படி காதல் வந்தது என்று கூறுவார். ரவுடியான ஜெயசூர்யா சிறுவயதில் அநாதையாக்கப்பட்டு வயதான பெண்மணி ஒருவரால் வளர்க்கப்பட்டு, மிகப்பெரிய தாத்தா ஒருவனின் விசுவாச சிஷ்யனாக இருப்பவர் என்று கூறுவார். மேலும் சிறுமி ஒருத்தி தனது அம்மாவின் வைத்திய செலவுக்கு பணம் இல்லை என்று கேட்கும்போது தன்னிடமும் நண்பர்களிடமும் பாக்கெட்டில் பணம் இல்லை என்பதால் அந்தப்பக்கமாக வரும் அமலாபாலை நிறுத்தி அவரது கழுத்தில் உள்ள செயினை பிடுங்கி அந்த சிறுமிக்கு பணம் கொடுத்து உதவுவார்.
இந்த காட்சியை தளபதி படத்திலேயே பார்த்திருக்கிறோமே என நாம் நினைக்கும்போதே அடுத்த காட்சியில், டான்ஸ் கிளாஸில் பிராக்டீஸ் செய்யும் அமலாபாலை சந்திக்கவரும் ஜெயசூர்யா அந்த செயினை அவர் பார்க்குமாறு வைத்துவிட்டு போவார். பின்னாடியே வரும் அமலாபால், அந்த செயின் தொலைந்துவிட்டது என வீட்டில் சொல்லிவிட்டதாக கூறி, அவரையே எடுத்துக்கொள்ள சொல்வார். இப்படித்தான் அமலாபாலுக்கு தன்மீது காதல் வந்தது என கதை விடுவார் ஜெயசூர்யா.
என்னடா ஒரு மலையாள இயக்குனர் அப்படியே அப்பட்டமாக ஒரு தமிழ்ப்படத்தின் காட்சிகளை சுட்டிருக்கிறாரே என்கிற நினைப்பு நமக்கு வரும். ஆனால் ஒரு கட்டத்தில், அமலாபால் தன்னைத்தான் காதலிப்பதாக சொல்லும் இன்னொரு ஹீரோவான குஞ்சாக்கோ போபன் அவரை அழைத்துச்சென்று தளபதி படத்தை போட்டுக்காட்டி, ஜெயசூர்யா அமலாபாலை ஏமாற்றியதை சொல்வார்.. இருப்பினும் மலையாள இயக்குனரான போபன் சாமுவேல், 'தளபதி' கதையை எடுத்து ஜெயசூர்யா-அமலாபாலுக்கு பயன்படுத்திய விதம் ரசிக்கும்படி நன்றாகவே இருக்கிறது.