ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மேக்ஸ் லேப் சினிமாஸ் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் என்று படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களை வாங்கி கேரளாவில் திரையிட்டு வருகிறார். அவரும் விஜய்யும் சேர்ந்து நடித்த படமான ஜில்லா படத்தை தனது சம்பளத்திற்கு பதிலாக கேரள உரிமத்தை வாங்கிக் வெளியிட்டார். இதில் அவருக்கு 4 கோடி லாபம் கிடைத்தது என்பார்கள். இதுதான் ஒரு தமிழ் படத்தின் உச்சகட்ட வியாபாரமாக கேரளாவில் இருந்தது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை 8 கோடியே 50 லட்சம் கொடுத்து கேரள உரிமத்தை மோகன்லால் வாங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. கேரள சினிமா சரித்திரத்தில் மலையாளம் அல்லாத ஒரு படத்தின் உச்சபட்ட பிசினஸ் இதுவாகும். மம்முட்டி, மோகன்லால் நடித்த நேரடி மலையாளப் படங்களுக்கு இது இணையானதாகும்.