ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஸ்வேதா மேனன் கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்துவரும் படம் 'நேவல் என்ன ஜூவல்' (நேவல் என்கிற நகை).. இந்தப்படத்தை ரஞ்சித் லால் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் பெரும்பகுதி கதைக்களம் சிறைச்சாலையை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது.. அதிலும் ஈரான் நாட்டு சிறைச்சாலையை பின்னணியாக கொண்டிருக்கிறது.. இதற்காக செட்டெல்லாம் போட்டு காசை வீணாக்க விரும்பாமல், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வையூரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேல் அங்கே படப்பிடிப்பும் நடத்தியுள்ளார்கள்..
இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தவேண்டும் என்கிற சூழ்நிலையில், ஜெயில் சூப்பிரண்டண்ட் மூலமாக எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் சிறைச்சாலையில் உள்ள சில சுவர்களை இவர்கள் வேறு கலரில் பெயின்ட் அடித்து படப்பிடிப்பு நடத்தியுள்ளார்களாம். அதுமட்டுமின்றி, இவர்களுக்கு சிறைச்சாலையின் வெளிப்பகுதியில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்க, இவர் சிறைச்சாலையின் உட்பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்களாம். இப்போது இதுபற்றி யாரோ மேலிடத்துக்கு எழுதிப்போட சிறைச்சாலைக்குள் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்துவிட்டாராம் ஜெயில் அதிகாரி..
இன்னும் முக்கியமான சில காட்சிகளை ஜெயிலின் உட்பகுதியில் தான் படமாக்கவேண்டி இருக்கிறதாம். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் இந்த சிறையில் இருந்த அதிகாரியிடம் முறைப்படி அனுமதி பெற்று, அவர் முன்னிலையில் தான் சிறைச்சாலையின் உட்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினார்களாம். படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் கைதிகள் யாரும் இலையாம். கட்டுமான பணிகள் மட்டுமே நடந்துகொண்டிருந்ததாம். சிறையின் சுவருக்கு பெயின்ட் அடித்தது கூட அது ஈரான் நாட்டு சிறைச்சாலை என்பதுபோல காட்டவேண்டுமே என்பதற்காகத்தானாம். படப்பிடிப்பு முடிவடைந்ததும், அதையும் சிறைச்சாலையின் ஒரிஜினல் நிறத்துக்கே மாற்றித்தருவதாக சொல்லி, அதற்கு முன்பிருந்த அதிகாரியும் ஒப்புக்கொண்டபின் தான் இந்த மாற்றமும் நடந்ததாம். ஆனால் இப்போது ஆட்சி மாறியபின், அரசியல்வாதிகள் பழைய அதிகாரியை மாற்றிவிட்டு தங்களுக்கு வேண்டிய புதிய அதிகாரியை நியமித்துவிட்டதால், படப்பிடிப்பு நடத்த இவர் அனுமதி தர மறுக்கிறாராம். இனி என்ன செய்வது என கையை பிசைந்துகொண்டிருக்கிறார்கள் படக்குழுவினர்