ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
என்னை அறிந்தால் படத்தில் நடித்தபின்பு ரசிகர்களிடம் ஓரளவு நன்றாகவே பாப்புலர் ஆகிவிட்டார் மலையாள நடிகை பார்வதி நாயர். மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் படத்தில் பிருத்விராஜின் தோழியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். ஆனால் இப்போது அவர் நடித்த கோப்பையிலே கொடும்காற்று என்கிற மலையாள படம் ஒன்று விரைவில் ரிலீஸாக இருப்பதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்.
இத்தனைக்கும் 2012ல் ஆரம்பிக்கப்பட்ட படம் இது.. நான்கு ஆண்டுகால கழித்து ரிலீசாகும் லெவலுக்கு இப்போதுதான் வந்துள்ளது. படம் ரிலீசானால் சந்தோஷம் தானே படவேண்டும்..? இவர் வருத்தப்படுகிறாரே என்றால் உடனே அவர் ஏதோ ஓவர் கிளாமராக நடித்த படம் என தவறாக நினைத்துவிடவேண்டாம். பார்வதி நாயரை ஒப்பந்தம் செய்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தியவர்கள் அவருக்கு சம்பள பாக்கி தரவில்லையாம். அதன்பின் மீதிக்காட்சிகளில் பார்வதி நாயரும் நடிக்கவில்லையாம். ஆனால் இப்போது படம் ரிலீசாகப்போகிறது என்றால் தான் நடிக்காமல் என்னமாதிரியாக படத்தை எடுத்துள்ளார்களோ என்றும் தனது பெயரை டேமேஜ் பண்ணிவிடுவார்களோ என்றும் தான் வருத்தத்தில் இருக்கிறாராம் பார்வதி நாயர்.