ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் நடிகர்களில் விஜய், அஜித் போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேமாதிரி கேரளாவிலும் உள்ளனர். அதனால்தான் அவர்கள் நடித்து வெளியாகும் படங்கள் தமிழகத்தைப்போலவே கேரளாவிலும் பரபரப்பாக வெளியாகி ஓடி வருகின்றன. மேலும் சூர்யாவின் படங்களுக்கும் கேரளாவில் வரவேற்பு உள்ளது என்றாலும், விஜய், அஜீத் படங்கள் அளவுக்கு இல்லை.
அதேசமயம் ஆந்திராவில் தமிழ் நடிகர்களில் சூர்யா படம் மட்டுமே அதிகப்படியான தியேட்டர்களில் ஓடி வசூல் சாதனை புரிந்து வருகிறது. தமிழ் நடிகர்களில் சூர்யாவுக்குத்தான் அங்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால்தான் சமீபகாலமாக சூர்யா நடிக்கிற படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டுமொழி ரசிகர்களையும் மனதில் கொண்டு உருவாகி வருகின்றன. அந்த வகையில், விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.
தற்போது ஹரி இயக்கும் சிங்கம்-3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் உருவானபோதும், தெலுங்கிலும் பெரிய அளவில் வெளியாக உள்ளது. அதன்காரணமாகவே படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஆந்திராவிலும் படமாக்கப்பட்டு வருகிறது. வில்லன்கள் ஆந்திராவில் இருப்பது போன்றும் கதை சித் தரிக்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், நிதின்-சமந்தா நடிப்பில் அ ஆ தெலுங்கு படத்தை இயக்கிய திரி விக்ரம் இயக்கத்தில் அடுத்து நடிக்கிறாராம் சூர்யா. தமிழ், தெலுங்கில் தயாராகும் அந்த படத்தில் சூர்யாவுக்கு இரண்டு வேடமாம்.