ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் லிங்குசாமியின் சமீபத்திய படங்கள் தோல்வியைத் தழுவியதால் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்நிலையில் மனம், 24 போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரம் குமார், அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கபார் சிங் படப்புகழ் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 2017 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.