ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரும்பையும் கொடுத்து தின்பதற்கு கூலியையும் கொடுத்தால் வேண்டாம் என யாராவது சொல்வார்களா..? ஆனால் சொல்கிறார்களே.. மோகன்லால் படத்துக்கு கதை எழுதுங்கள் என தேடிப்போகும் கதாசிரியர்கள் எல்லாம் இல்லை என்னால் முடியாது என மறுத்து ஒதுங்குகிறார்கள் என்பது அதிசயத்திலும் அதிசயம்.. ஆனால் அவர்கள் ஒதுவங்குவது மோகன்லாலை பார்த்து அல்ல.. அவரை வைத்து படம் இயக்கப்போகும் பிரபல இயக்குனர் ஐ.வி.சசியை பார்த்து தான்.
காரணம் மலையாள திரையுலகில் நாற்பது வருட வெற்றிவரலாறு கொண்டவர் இயக்குனர் ஐ.வி.சசி. மம்முட்டியை வைத்து ஐந்து படங்களை இயக்கினால் மோகன்லாலை வைத்து ஒன்றை இயக்குவார். அப்படியும் மோகன்லாலை வைத்து 22 படங்களை இயக்கிய ஐ.வி.சசி, மோகன்லாலுக்கு 'அனுராகி', 'தேவாசுரம்' என ஹிட்டுக்களையும் கொடுக்க தவறவில்லை. கடைசியாக மோகன்லாலை வைத்து 2௦௦௦ல் 'ஷ்ரதா' என்ற படத்தை இயக்கினார் ஐ.வி.சசி. இப்போது வனவாசம் முடிந்ததுபோல் பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
இந்த தகவலை இருவருமே உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இந்த புதிய படம் ஏற்கனவே தங்கள் கூட்டணியில் உருவான 'தேவாசுரம்' படத்தின் கதையையும் மிஞ்சவேண்டும் என எதிர்பார்க்கிறார் ஐ.வி.சசி.. அதுதான் பிரச்சனையே.. இவர்கள் கூட்டணி நீண்ட வருடம் கழித்து இணைவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் கதை எழுதுகிறேன் என வீண் ரிஸ்க் எடுக்கவேண்டாம் என நினைக்கிறார்கள் பலரும். அவ்வளவு ஏன்.. 'தேவாசுரம்' படத்துக்கு கதை எழுதிய இயக்குனர் ரஞ்சித்தே என்னால் ஆகாதுப்பா என ஒதுங்கிவிட்டாராம். இந்தக்கூட்டணியின் ப(ட்)டத்தை வெற்றிகரமாக பறக்கவிட வரப்போகும் கதாசிரியர் யாரோ..?