அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சவாலான கேரக்டர்களில் நடிக்கவேண்டுமா..? கூப்பிடு லட்சுமி பிரியாவை என்று சொல்லும் அளவுக்கு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் படைப்பாளிகளின் கவனத்தை கவர்ந்துள்ளார் லட்சுமி பிரியா. தமிழில் 'சுட்டகதை' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி பிரியா. அடுத்து மிஷ்கினின் உதவியாளர் இயக்கிய 'கள்ளபடம்' படத்தில் வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் ரோலில் பல நடிகைகள் மறுத்துவிட்ட நிலையில் தைரியமாக நடித்து பாராட்டு பெற்றார் லட்சுமி பிரியா. 'யாகாவராயினும் நா காக்க' படத்திலும் வில்லித்தனம் காட்டினார். தொடர்ந்து 'மாயா', 'களம்' என த்ரில்லர் படங்களிலும் இவருக்கு தவறாது இடம் கிடைத்து வந்தது. இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால்தான் எந்த ரோல் என்றாலும் தயங்காமல் ஏற்றுக்கொள்கிறார்.
ஹீரோயினாக இருப்பதைவிட நடிகையாக இருப்பதையே பெரிதும் விரும்பும் இவர் கடந்த வருடம் மலையாளத்தில் பிஜு மேனனுக்கு மனைவியாக ஐந்து வயது பையனுக்கு அம்மாவாக நடித்தார். தற்போது கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கத்தில் நிவின்பாலி தமிழில் நடிக்கும் புதிய படத்தில் லட்சுமி பிரியா, மீனவ பெண்ணாக நடிக்கிறார். சுத்த சைவமான இவர், இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பது சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது என்கிறார்.. இந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிக்கும் 'சதுரங்க வேட்டை' நட்டிக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.