ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சி.ஜே.பாஸ்கர் இயக்கி வந்த தொடர் ஆதிரா. சின்னத்திரைகளில் ஒளிபரப்பான சீரியல்களில் இந்த சீரியல் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஸ்ரீவாணி, அஞ்சுஅரவிந்த், ஜெய்தனுஷ், அம்பிகா மோகன் உள்பட பலர் நடித்தனர். இந்த தொடரில் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில்தான் படமாக்கப்பட்டு வந்தது. அதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட் டோரில் முகாமிடுவது போன்று இந்த ஆதிரா தொடருக்காக கேரளாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தார் சி.ஜே.பாஸ்கர்.
ஆனால் தற்போது 250 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள ஆதிரா தொடர் இன்னும் ஓராண்டு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 24-ந்தேதியோடு ஆதிரா தொடர் நிறைவு பெறுவதாக கூறுகிறார்கள். அதை யடுத்து அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் இந்தியில் பெரிய அளவில் நேயர்களின் வரவேற்பை பெற்ற ஒரு டப்பிங் நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறதாம்.