ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நேற்று நடைபெற்ற 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கடந்த வருடத்திய சிறந்த மலையாள நடிகராக மம்முட்டிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சலீம் அஹமது இயக்கிய 'பத்தேமாறி' என்கிற படத்தில் குடும்பத்திற்காக கடல் கடந்து சென்று சம்பாதிக்கும் கல்ப்வாசியாக அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார் மம்முட்டி. அதேசமயம் சிறந்த படமாகவும் 'பத்தேமாறி' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் சிறந்த படம் என இரண்டும் மம்முட்டிக்கே சொந்தமாகியுள்ளதால் மம்முட்டி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருகின்றனர்.
அதனுடன் இன்னொரு சந்தோஷமும் சேர்ந்துகொண்டுள்ளது. அதாவது கடந்த வருடமும் 'வர்ஷம்' படத்தில் மகனை இழந்து வாடும் தந்தையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மம்முட்டிக்குத்தான் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, மம்முட்டி நடித்த இன்னொரு படமான 'முன்னறியிப்பு' தான் சிறந்த மலையாளப்படமாக விருதுபெற்றது. வேணு என்பவர் இயக்கியிருந்த இந்தப்படத்தில் சிறைக்கைதியாக மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் மம்முட்டி. ஆக 62 மற்றும் 63வது வருடத்தின் பிலிம்பேர் விருதுகளை தன்வசப்படுத்தியதன் மூலம், தனது படம் கமர்ஷியலாக வெற்றி அடைகிறதோ இல்லையோ, விருதுகளை பெறுவதில் மட்டும் சொல்லி அடிக்கும் கில்லியாக தொடர் சாதனை படைத்துள்ளார் மம்முட்டி.