ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழில் 'அச்சம் என்பது மடமையடா' என்றும் தெலுங்கில் 'சாஹசம் சுவாசகா சாகிப்போ' என்றும் நீண்ட நாட்களாகத் தயாராகி வந்த படம் தற்போது இசை வெளியீடு வரை வந்துவிட்டது. தமிழில் நேரடியாக இணையதளங்களில் வெளியிட்ட கௌதம் மேனன் தெலுங்கில் மட்டும் இப்படத்திற்காக பிரம்மாண்டமான விழா ஒன்றை நேற்று நடத்தியுள்ளார். இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க, தமிழில் நாயகியாக நடிக்கும் மஞ்சிமா மோகன் தெலுங்கிலும் ஹீரோயினாக நடிக்கிறார். நேற்று நடைபெற்ற இசை விழாவில் இயக்குனர் கௌதம் மேனன், இசையமைப்பாளர், படத்தின் நாயகன் நாக சைதன்யா, நாயகி மஞ்சிமா மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகார்ஜுனா, தன்னுடைய இளைய மகன் அகிலுடன் வந்து கலந்து கொண்டார்.
நாக சைதன்யா நாயகனாக நடித்து கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கான 'ஏ மாய சேசவே' படம் நாக சைதன்யாவுக்குத் தெலுங்குத் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது. அதனால், தற்போது 'சாஹசம் சுவாசகா சாகிப்போ' படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டை சிறப்பாக நடத்திய கௌதம் மேனன் தமிழ் ரசிகர்களை ஏமாற்றியது ஏனோ....?. தமிழில் கௌதம் மேனன்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு.