ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக எல்லோருமே தங்களது படங்களுக்கு யு சான்றிதழ் பெற வேண்டும் என்பதில்தான் உறுதியாக உள்ளனர். மாறாக, ஏ, ஏயு சான்றிதழ் கொடுத்து விட்டால் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள். இந்நிலையில், பாபி சிம்ஹா நடிப்பில் ஜூன் 24-ந்தேதி வெளியாகும் மெட்ரோ படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழே தர மறுத்து விட்டார்களாம். பின்னர் ரிவைசிங் கமிட்டியினர் பார்த்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம்.
மேலும், இந்த மெட்ரோ படத்தின் கதை செயின் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாம். சில நூதன செயின் திருட்டு சம்பவங்கள் படமாக்கப் பட்டுள்ளதாம். அந்த வகையில், இந்த படத்தை பார்த்தால் செயின் திருட்டில் இருந்த எப்படி தப்புவது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்களாம். அப்படிப்பார்த்தால் இந்த படம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்கிறர்கள்.
இருப்பினும் இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ரிலீஸ் பண்ண அனுமதியே தரமுடியாது என்று கூறிவிட, பின்னர் ரிவைசிங் கமிட்டியில் உள்ள கங்கை அமரன் பார்த்து விட்டுதான் ஏ சான்றிதழ் கொடுத்தாராம். இல்லையே மெட்ரோ படம் ரிலீசே ஆக முடியாத நிலை ஏற்பட்டிருக்குமாம். அதேசமயம், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் பிட் படம் என்று நினைத்து விடுவார்களோ என்றும் அப்பட டைரக்டர் ஆனந்த கிருஷ்ணன் பயந்து கொண்டிருக்கிறாராம்.