ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மக்கள் சேவைக்காக விரைவில் புதிய இயக்கம் துவங்க உள்ளதாக நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். பழநியில் வந்த அவர் கூறியதாவது: அமைதியாக வாழ ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளேன். கீதையை நம்புகிறேன். வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்பட நினைக்கிறேன். இதனால் தான் கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு சேகரிக்க செல்லவில்லை.
தமிழகத்தில் ஆறு, குளங்கள், அணைகளை துார்வார வேண்டும். அரசியல்வாதிகளை குறைசொல்லக்கூடாது. வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதால், வேட்பாளர்கள் பணத்திற்கு நாட்டை விற்கின்றனர். தேர்தலில் மூன்றாவது அணி பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. நான் மக்களுக்கு சேவை செய்ய விரைவில் புதிய இயக்கத்திற்கு பழநியில் பிள்ளையார் சுழி இடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.